search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை  பெண் போலீஸ் உள்பட 5 பேர் மீது வழக்கு
    X

    கோப்பு படம்

    நிலக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை பெண் போலீஸ் உள்பட 5 பேர் மீது வழக்கு

    • பெண்ணிடம் ரூ.3 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தியதால் போலீசில் புகார் அளித்தார்..
    • போலீசார் கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்ைட அருகே மேலகோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் அழகுராஜ்(35). இவர் தமிழக ஊர்காவல்படையில் திண்டுக்கல்லில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் லீலாவதி(32) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்தின்போது சீர்வரிசையாக 10 பவுன் நகை, ரூ.3 லட்சம் மதிப்பில் பொருட்கள் கொடுக்கப்பட்டது. இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    இந்தநிலையில் மேலும் ரூ.3 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை வாங்கி வருமாறு லீலாவதியை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லதா, லீலாவதியின் கணவர் அழகுராஜ், மாமனார் முத்துச்சாமி, மாமியார் ஜோதி, நாத்தனார் நாகலட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நாகலட்சுமி விளாம்பட்டி போலீசில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×