என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நிலக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை பெண் போலீஸ் உள்பட 5 பேர் மீது வழக்கு
- பெண்ணிடம் ரூ.3 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தியதால் போலீசில் புகார் அளித்தார்..
- போலீசார் கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்ைட அருகே மேலகோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் அழகுராஜ்(35). இவர் தமிழக ஊர்காவல்படையில் திண்டுக்கல்லில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் லீலாவதி(32) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது சீர்வரிசையாக 10 பவுன் நகை, ரூ.3 லட்சம் மதிப்பில் பொருட்கள் கொடுக்கப்பட்டது. இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
இந்தநிலையில் மேலும் ரூ.3 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை வாங்கி வருமாறு லீலாவதியை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லதா, லீலாவதியின் கணவர் அழகுராஜ், மாமனார் முத்துச்சாமி, மாமியார் ஜோதி, நாத்தனார் நாகலட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நாகலட்சுமி விளாம்பட்டி போலீசில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்