search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே இளம்பெண் மாயம்
    X

    ஆலங்குளம் அருகே இளம்பெண் மாயம்

    • அனுப்பிரியாவுக்கு சக்தி என்பவருடன் திருமணமாகி 2 மாத கைக்குழந்தை உள்ளது.
    • கணவர் வீட்டில் பிரச்சினை காரணமாக திருமணமான சில மாதங்களிலேயே அனுப்பிரியா ஆலங்குளத்திற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

    தென்காசி:

    ஆலங்குளம் பஞ்சாயத்து ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் அனுப்பிரியா(வயது 19). இவருக்கு கடந்த ஆண்டு பாவூர்சத்திரம் அருகே உள்ள ராசப்பநாடானூரை சேர்ந்த சக்தி என்பவருடன் திருமணமாகி 2 மாத கைக்குழந்தை உள்ளது.

    இந்நிலையில் அனுப்பி ரியா நேற்று வீட்டில் தனியாக இருந்த நிலையில், திடீரென காணாமல் போய்விட்டார். குழந்தை மட்டும் வீட்டில் தனியாக அழுது கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அனுப்பிரியாவின் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்து மகள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுப்பிரியாவை தேடி வருகின்றனர். திருமணமான சில மாதங்களிலேயே அவர் கணவர் வீட்டில் பிரச்சினை காரணமாக ஆலங்குளத்திற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பிரச்சினை காரண மாக அவர் மாயமானாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×