search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை தலைமை அஞ்சலகத்தில் யோகா தினம் கடைபிடிப்பு
    X

    தஞ்சை தலைமை அஞ்சலக பணியாளர்களுக்கு இயற்கை மருத்துவர் ஆர்.கலைமகள் யோகாசன பயிற்சி அளித்தார்.

    தஞ்சை தலைமை அஞ்சலகத்தில் யோகா தினம் கடைபிடிப்பு

    • யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ஆர்.கலைமகள் கலந்து கொண்டு யோகா செய்வதன் அவசியத்தையும் அதன் பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
    • அலுவலகத்தில் பணிபுரிகின்ற ஊழியர்கள் அனைவருக்கும் எளிய முறையில் செய்யும் விதமாக பல்வேறு யோகாசனங்களை பயிற்றுவித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் 8-வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தஞ்சை தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சலக தலைவர் எஸ்.அருள்தாஸ் தலைமை தாங்கி நடத்தினார். சிறப்பு விருந்தினராக யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ஆர்.கலைமகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி அளித்தார். மேலும் யோகா செய்வதன் அவசியத்தையும், அதன் பயன்களை பற்றியும் எடுத்துரைத்தார்.

    அலுவலகத்தில் பல்வேறு வயது வரம்பில் பணிபுரிகின்ற அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் எளிய முறையில் செய்யும் விதமாக பல்வேறு யோகா சனங்களை பயிற்றுவித்தார். முன்னதாக, தஞ்சாவூர் தலைமை அஞ்சலக துணை அஞ்சலக தலைவர் குழந்தைராஜ் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக சித்ரா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தின் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    Next Story
    ×