search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயூரநாதர், வதான்யேஸ்வரர் கோவில்களில் துர்கா ஸ்டாலின் வழிபாடு
    X

    கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்த துர்கா ஸ்டாலின்.

    மாயூரநாதர், வதான்யேஸ்வரர் கோவில்களில் துர்கா ஸ்டாலின் வழிபாடு

    • வதான்யேஸ்வரர் கோவிலில் கடந்த 10-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் (வள்ளலார்) கோவில் குரு பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.

    இக்கோவிலில் கடந்த 10 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வதான்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சாமி திருக்கோயில் கடந்த 3ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

    வதான்யேஸ்வரர் கோயில், மாயூரநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இரு ஆதீனங்கள் சார்பில் தமிழக முதல்வர் குடும்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாததால் நேற்று இரண்டு கோயில்களிலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

    Next Story
    ×