search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக சுற்றுலா தின தூய்மை பிரச்சாரம்
    X

    தூய்மை பிரச்சாரத்தை சூரியனார்கோவில் ஆதீனம் மகாலிங்க தொடங்கி வைத்தார்.

    உலக சுற்றுலா தின தூய்மை பிரச்சாரம்

    • பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் போன்ற பொருட்களை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
    • கிராமங்கள் மற்றும் நகரங்களில் தூய்மை பணிகளை பரப்புவேன்.

    கும்பகோணம்:

    சமூக கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு குறித்து கிராம சமுதாய மக்கள் விழிப்பு ணர்வு பெற்று வளர்ச்சி பெற இந்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் 108இடங்களை

    தேர்வு செய்து அதில் கும்பகோணம் சுற்றியுள்ள சூரியனார் கோவில், கஞ்சனூர், திருநாகேஸ்வரம் நவக்கிரக கோயில்களில்

    தூய்மை பிரச்சாரம், உறுதிமொழி பிரச்சாரம், விழிப்புணர்வு பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சி கள் உலக சுற்றுலா தினத்தில் நடைப்பெற்றது.

    தூய்மை பிரச்சாரத்தை சூரியனார்கோவில் ஆதினம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    ராமலிங்கம் எம்.பி, முன்னாள் எம்.பி. பாரதிமோ கன், ஒன்றிய குழு துணைத்த லைவர் கோ.க.அண்ணா துரை, தெற்கு மண்டல சுற்றுலா துறை அதிகாரி மாரிமுத்து, டாபி மாநில தலைவர் ஜாஹிர் உசேன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து முன்னதாக எனது குடும்பம், எனது ஊர், எனது கிராமம் மற்றும் எனது பணியிடத்து டன் தூய்மைக்கான தேடலை தொடங்குவேன் எனவும், உலக நாடுகள் தூய்மையா னவை என்றும் அவர்களின் குடிமக்கள் குப்பை கொட்டு வதில் ஈடுபடுவதில்லை எனவும், இந்த உறுதியான நம்பிக்கையுடன், கிராமங்கள் மற்றும் நகரங்களில் தூய்மை பணிகளை பரப்புவேன் எனவும் 100 மணிநேரத்தை தூய்மைக்காக செலவிட முயற்சி செய்வது என்றும்,

    தூய்மையை நோக்கி எடுக்கும் ஒவ்வொரு அடியும் எனது நாட்டை தூய்மையாக மாற்ற உதவும் என்றும்சுத்த மான தேசமே ஆரோக்கியமான தேசம் என மாணவர்கள் தூய்மை உறுதிமொழியை எடுத்தனர்.

    மேலும் பள்ளி மாணவ ர்கள் கை உறை அணிந்து கோவில் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் போன்ற பொரு ட்களை அகற்றி தூய்மை பணிகளை செய்தனர்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகி மகாலிங்கம், அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி இணை செயலாளர் சிராஜுதின், பள்ளி தாளா ர்கள், தலைமை ஆசிரி யர்கள், உள்ளாட்சி பிரதிநிதிக ள்,கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×