search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மந்தியூரில் தோட்டக்கலை பணிகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு
    X

    மந்தியூரில் தோட்டக்க கலை பணிகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு செய்த காட்சி.


    மந்தியூரில் தோட்டக்கலை பணிகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு

    • உலக வங்கி நீர் மேலாண்மை சிறப்பு நிபுணர் ஜூப்ஸ் டோட்ஜீஸ்டிக் மற்றும் சுற்றுச்சூழல் ஆலோசகர் வனிதா ஹோம்ரூனு ஆய்வு செய்தனர்.
    • ஊடு பயிர் சாகுபடி செய்து வருவது குறித்து அங்குள்ள முன்னோடி விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

    கடையம்:

    கடையம் வட்டாரம் மந்தியூர் கிராமத்தில் உலக வங்கியின் நிதி உதவியோடு செயல்படும் தோட்டக்கலை துறை பணிகளை உலக வங்கி நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வினை உலக வங்கி நீர் மேலாண்மை சிறப்பு நிபுணர் ஜூப்ஸ் டோட்ஜீஸ்டிக் மற்றும் சுற்றுச்சூழல் ஆலோசகர் வனிதா ஹோம்ரூனு ஆய்வு செய்தனர். இவர்களுடன் சென்னையை சேர்ந்த பயிர் நிபுணர் சிவகுமார், கிருஷ்ணன், பொறியாளர் சந்திரசேகர், வித்யாசாகர், விஜயராம், ஜூடித் டி சில்வா உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

    விவசாயிகளிடம் கலந்துரையாடல் செய்த இந்த குழு திட்டத்தின் பயன்பாடு குறித்தும், தோட்டக்கலை - மலை பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசனம் குறித்தும் மற்றும் கடையம் வட்டாரத்தில் தென்னையில் ஊடுபயிராக பயிரிட்டுள்ள கத்திரி அதனால் பயனடைந்து நெல்லியில் ஊடு பயிராக சிறு கிழங்கு சாகுபடி செய்து வருவது குறித்தும், அங்குள்ள முன்னோடி விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

    ஆய்வில் தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி நிபுணர் குழுவிற்கு தோட்டக் கலை துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விளக்கி கூறினார்.

    கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஞானசேகரன், தோட்டக்கலை அலுவலர் ஷபா பாத்திமா, உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜன், திருமலைக் குமார், பார்த்தீபன், பானுமதி, இசக்கியம்மாள் உடன் இருந்து ஆய்விற்கான முன்னேற்பாடுகளை செய்தனர்.

    Next Story
    ×