என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உலக வான் கட்டுப்பாட்டாளர் தின கொண்டாட்டம்
- உலகம் முழுவதும் 1922-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது.
- வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டது.
மீனம்பாக்கம்:
உலகம் முழுவதும் 1922-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் சர்வதேச வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் தினம் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டது.
சென்னை விமான நிலைய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் வாயிலாக சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 450 விமான சேவைகள் கையாளப்படுகின்றன.
சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில் செயற்கைகோள் வாயிலாக கடல் மேல் செல்லும் விமானங்களை கண்காணிப்பதற்கான நவீன தொழில் நுட்பங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. அதே போல தென் இந்தியா முழுவதும் சுமார் 25 ஆயிரம் அடி முதல் 46 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் விமானங்களில் உள்ள விமானிகளுடன் தொடர்பு கொள்ள அதி உயர அலைவரிசை தொழில்நுட்பமும் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் தென் இந்தியா முழுவதும் 1500 விமானங்கள் கையாளப்படும். விமானங்கள் தடையில்லாமல் வானில் பறக்க, தரையிறங்க, ஓடுபாதைக்கு செல்ல, வானில் ஒரு விமானத்துடன் மற்றொரு விமானம் மோதாமல் இருக்க செய்வது வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் பணி ஆகும். எந்தொரு பயணிக்கும் பாதிப்பு இல்லாமல் விமான பயணத்தை மேற்கொள்ள தரையில் இருந்து கையாளும் பணியை விமான நிலைய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்