என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் அழைப்பை நம்பி ஏமாந்த தொழிலாளி- ராசிக்கல் மோதிரம் கேட்டவருக்கு வந்தது பிளாஸ்டிக் மோதிரம்
    X

    ஏமாந்த தொழிலாளி மாரிமுத்து

    செல்போன் அழைப்பை நம்பி ஏமாந்த தொழிலாளி- ராசிக்கல் மோதிரம் கேட்டவருக்கு வந்தது பிளாஸ்டிக் மோதிரம்

    • மாரிமுத்து தனது ராசி, வீட்டு முகவரி உள்ளிட்ட விபரங்களை கூறி உள்ளார்.
    • பார்சல் கொண்டு வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் எடுக்கவில்லை.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது63). சுமை தூக்கும் கூலித்தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது.

    அந்த எண்ணை மாரிமுத்து திரும்பி தொடர்பு கொண்டபோது தங்களிடம் ராசிக்கல் மோதிரம் இருப்பதாகவும் அவரவர் ராசிக்கேற்ப மோதிரத்தை அனுப்பி வைப்பதாகவும் அதற்கு ஏற்ப பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.

    இதனை நம்பிய மாரிமுத்து தனது ராசி, வீட்டு முகவரி உள்ளிட்ட விபரங்களை கூறி உள்ளார். இதனை தொடர்ந்து அவரது வீட்டுக்கு ராசிக்கல் மோதிரம் பார்சலில் வந்தது. ரூ.2 ஆயிரம் கொடுத்து பார்சலை வாங்கி பிரித்து பார்த்தார். அதில் குழந்தைகளின் விளையாட்டு மோதிரம் இருந்தது.

    இதுகுறித்து மாரிமுத்து கூறுகையில், மிஸ்டு கால் அழைப்பை நம்பி நானும் எனது குடும்பத்தினரும் மோதிரத்துக்கு ஆர்டர் கொடுத்தோம். ரூ.2 ஆயிரம் செலுத்தி பார்சலை பிரித்து பார்த்தபோது குழந்தைகள் விளையாட்டு மோதிரம் போல் சிறிய அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்காலான மோதிரம் இருந்தது.

    பார்சல் கொண்டு வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் எடுக்கவில்லை. வேறு எண்ணில் இருந்து அழைத்தால் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×