search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளிக்கு கத்திகுத்து
    X

    தொழிலாளிக்கு கத்திகுத்து

    • சேலம் அன்னதானப்பட்டி அடுத்த மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த தொழிலாளிக்கு கத்திகுத்து.
    • பிரகாஷ் அருகில் இருந்த குவாட்டர் பாட்டிலை உடைத்து சுப்ரமணியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் குடல் சரிந்து சுப்ரமணி மயங்கி விழுந்தார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி அடுத்த மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்ரமணி ( வயது 60).

    பிரகாஷ் (57). நண்பர்களான இவர்கள் இருவரும் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் மூட்டை

    தூக்கும் கூலித் தொழிலாளர்க ளாக வேலை செய்து வருகின்ற னர்.

    இந்த நிலையில் வேலை முடிந்து இருவரும் நேற்று இரவு தாதகாப்பட்டி சண்முக நகர் சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த வந்தனர். தொடர்ந்து இருவரும் மது அருந்தி விட்டு பேசி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சுப்ரமணி பிரகாஷை தகாத வார்த்தைகளால் பேசியதாக சொல்லப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் அருகில் இருந்த குவாட்டர் பாட்டிலை உடைத்து சுப்ரமணியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் குடல்

    சரிந்து சுப்ரமணி மயங்கி விழுந்தார். இதனால் பதற்ற மடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அருகில் இருந்த வர்கள் படுகாயமடைந்த சுப்ர

    மணியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×