search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே விபத்து - மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி
    X

    நாங்குநேரி அருகே விபத்து - மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி

    • களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் பால்துரை (வயது65). தொழிலாளி
    • நான்குவழிச் சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் பால்துரை (வயது65). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராகவன் (72).

    இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இன்று காலை நாங்குநேரி அருகே தாழைகுளத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    அவர்கள் நான்குவழிச் சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் சம்பவ இடத்திலேயே பால்துரை பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ராகவனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×