search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னங்குறிச்சியில் தீக்குளித்து தொழிலாளி தற்கொலை
    X

    கன்னங்குறிச்சியில் தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

    • கன்னங்குறிச்சியில் தீக்குளித்து தொழிலாளி தற்கொலை ெசய்து கொண்டார்.
    • குடிப்பழக்கம் உடைய முருகன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி சின்னகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் குடிப்பழக்கம் உடைய முருகன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

    நேற்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கடைக்கு சென்று ஜூஸ் வாங்கி வருமாறு முருகன் அவரது மனைவியை அனுப்பி உள்ளார். அவர் கடைக்கு சென்று வரு வதற்குள் வீட்டில் இருந்த மண்எண்ணையை தனக்குத்தானே உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதில் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் தீயை அணைத்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×