என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
- பாலாஜி (வயது 50). இவர் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வந்தார்.
- இரவு திடீரென தன்னுடைய ஓட்டு வீட்டில், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் நெத்திமேடு, மணியனூர் திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 50). இவர் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு திடீரென தன்னுடைய ஓட்டு வீட்டில், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்த, அன்னதானப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அவரது மகன் அருள்சஞ்சய், போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது தந்தை பாலாஜிக்கு வலது கையில் அடிபட்டு மருத்துவம் பார்த்து வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






