என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் மகளிர் காங்கிரஸ்  மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
    X

    ஓசூரில் மகளிர் காங்கிரஸ் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

    • ஓசூரில் நேற்று மெழுகுவர்த்தி எந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மல்யுத்த வீராங்கனையருக்கு நீதி கேட்டு, ஓசூரில் நேற்று மெழுகுவர்த்தி எந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் - தளி சாலையில் பட்டாளம்மன் கோவில் அருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் கலந்துகொண்டு, கண்டன உரையாற்றினார். மேலும் இதில், மாநகர தலைவர் தியாகராஜன், கலந்துகொண்டனர்.

    Next Story
    ×