என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்த பெண் சாவுசப்-கலெக்டர் தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் விசாரணை
- (வயது 32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி இந்துமதி (32). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
- 2-ம் முறை கர்ப்பமான இந்துமதி, கடந்த 4-ந்தேதி பிரசவத்துக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 5-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி ஓலைப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி இந்துமதி (32). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
2-ம் முறை கர்ப்பமான இந்துமதி, கடந்த 4-ந்தேதி பிரசவத்துக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 5-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பரிதாபமாக இறந்தார்
அதனை தொடர்ந்து இந்துமதிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அவர் மயக்கம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகியது. இதனால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே இதுபோன்று ஓமலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி கஞ்சநாயக்கன்பட்டி காட்டூரை சேர்ந்த சண்முகம் மனைவி சோனியா (29) என்பவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அவரது உடல் நிலை மோசமாகவே மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது சோனியா பரிதாபமாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று இந்துமதியும் இறந்திருப்பதால் டாக்டர்கள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மருத்துவ குழுவினர் ஆய்வு
இந்த நிலையில் இந்துமதி இறந்த மறுநாள் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் , ஓமலூர் அரசு மருத்துவமனையில் இந்துமதிக்கு அளித்த சிகிச்சை முறை, சிகிச்சை யின்போது வழங்கிய மயக்க மருந்தின் அளவு உள்ளிட்ட விபரங்கள் குறித்து ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.
சப்-கலெக்டர் நியமனம்
இது குறித்து சேலம் மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்த சப்-கலெக்டர் நியமிக்கப் பட்டுள்ளது. அடுத்த வாரம் அவரது தலைமையில் இந்துமதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதுபோல் மருத்துவ குழு வழங்கிய தகவல், பிரேத பரிசோதனை முடிவு ஆகியவையும் ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும் இந்துமதி கணவர், அவரது பெற்றோர் ஆகியோரையும் அழைத்து கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட உள்ளது, என்றனர்.






