என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணத்திற்காக கழுத்து இறுக்கி பெண் கொலை
- சரஸ்வதி கழுத்து இறுக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
- போலீசார் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொன்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது51). இவரது கணவர் இறந்து விட்டார். சரஸ்வதி வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் இவருக்கு சொந்தமான நிலம் பழைய பேட்டை அருகே உள்ளது. அந்த காலி நிலத்தை நேற்று ரூ.35 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். சரஸ்வதி புதிய வீடு கட்டி வருகிறார். பணத்தை வீட்டில் வைத்து நேற்றிரவு அவர் அயர்ந்து படுத்து தூங்கினார்.
இந்த நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் சரஸ்வதி வீடு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சரஸ்வதி கழுத்து இறுக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.35 லட்சம் பணம் கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.
இது ெதாடர்பாக போலீசார் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






