search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் கணவரால் தாக்கப்பட்ட பெண் சாவு - கொலை வழக்காக மாற்றம்
    X

    சங்கரன்கோவிலில் கணவரால் தாக்கப்பட்ட பெண் சாவு - கொலை வழக்காக மாற்றம்

    • தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் தங்கமாரி செல்வம். கூலித்தொழிலாளி.
    • இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனலெட்சுமி இன்று காலை உயிரிழந்தார்

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் தங்கமாரி செல்வம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனலெட்சுமி (வயது 42). தங்கமாரிசெல்வத்திற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளதாக தெரிகிறது.

    இதனால் அவர் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று தங்கமாரிசெல்வம் மதுகுடித்து விட்டு வந்துள்ளார்.

    இதனால் கணவன் - மனைவிக்கிடையே வாக்கு–வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கமாரிசெல்வம் மனைவியை சரமாரியாக தாக்கினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதுதொடர்பான புகாரின்பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமாரி–செல்வத்தை கைது செய்தனர்.

    இந்நிலையில் மருத்துவ–மனையில் சிகிச்சை பெற்று வந்த தனலெட்சுமி இன்று காலை உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கொலை வழக்காக போலீசார் மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×