search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை-பாலக்காடு ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அகலப்படுத்தப்படுமா?
    X

    கோவை-பாலக்காடு ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அகலப்படுத்தப்படுமா?

    • நீண்ட நேரம் காத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
    • பாலத்தின் கீழ் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்படியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    குனியமுத்தூர்

    கோவை பாலக்காடு ரோட்டில் மதுக்கரை அடுத்து மரப்பாலம் பகுதி உள்ளது. இங்கு ஒரு ெரயில்வே மேம்பாலம் உள்ளது. பாலத்தின் மேல் ெரயில் செல்லும் செல்லும்படியாகவும், பாலத்தின் கீழ் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்படியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    கீழே பஸ், லாரிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பகுதியானது மிகவும் குறுகலாக காணப்படுகிறது. பாலத்தின் உட்பகுதிக்குள் ஒரு பஸ் அல்லது லாரி வந்தால், எதிரே வரும் வாகனங்கள் காத்திருந்து நின்று, அவை சென்ற பிறகுதான் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

    கேரளா வந்து, செல்லக்கூடிய அனைத்து லாரிகள் மற்றும் பஸ்கள் அனைத்தும் இந்த வழியாகத்தான் சென்றாக வேண்டும். மேலும் காலை மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி பஸ்கள் ஏராளமாக இந்த வழியாக செல்லக்கூடிய நிலை உள்ளது. எனவே வாகனங்கள் அனைத்தும் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும் காட்சியை அடிக்கடி காண முடிகிறது.

    தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப சாமி வாகனங்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது இப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த எரிச்சலைத் தரும் நிலை உள்ளது.

    எனவே ெரயில்வே நிர்வாகம் ெரயில்வே மேம்பாலத்தின் கீழ் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையை சற்று அகலப்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் 2 நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் அளவுக்கு அகலப்படுத்தினால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×