என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொடைக்கானல் கீழ்மலையில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் யானைக்கூட்டம்
- வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி யானை கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
- விவசாய நிலங்களுக்குள் புகுந்து காபி, வாழை, மிளகு உள்ளிட்ட பயிர்களை யானைகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் காபி, மிளகு, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி யானை கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தண்ணீர் தேடி இடம்பெயரும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. பன்றிமலை அருகே அழகுமலை பகுதியில் கடந்த 4 நாட்களாக யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னிவாடி வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
ஆனால் இரவு நேரத்தில் மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காபி, வாழை, மிளகு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
எனவே யானைகள் நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்