என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி: பெட்டிக்கடைக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு
    X

    இரவு நேரத்தில் பெட்டிக்கடைக்குள் புகுந்த ஒற்றை யானையை படத்தில் காணலாம்.

    பழனி: பெட்டிக்கடைக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு

    • உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி யானைகள் வயல்வெளி களுக்குள் புகுந்து விடுவது வழக்கம்.
    • கொடைக்கானல் சாலையில் தேக்கந்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்குள் யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலாறு, பொருந்தலாறு, தேக்கந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு யானைகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வயல்வெளி களுக்குள் புகுந்து விடுவது வழக்கம். தற்போது கோடை க்காலம் என்பதால் அடி க்கடி யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வனப்பகு தியை ஒட்டியுள்ள பகுதி களில் உள்ள விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறு த்தியுள்ளனர்.

    இந்நிலையில் பழனி - கொடைக்கானல் சாலையில் தேக்கந்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடை க்குள் யானை புகுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இரை தேடி வந்த ஒற்றை யானை அந்த பெட்டிக்க டையை உடைக்க முயலும் காட்சி அதில் பதிவாகியு ள்ளது. ஆனால் நீண்ட நேரமாக அந்த கடையில் நின்று கொண்டு இருந்த யானை அதன் பிறகு அங்கி ருந்து நகர்ந்து சென்றது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை யினருக்கு தகவல் தெரி வித்துள்ளனர்.

    குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள் யானை வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ள னர். மேலும் கோடை காலம் முடியும் வரை யானை களுக்கு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டியில் நீரை தேக்கி வைக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×