என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயியை தாக்கிய மனைவியின் முகநூல் நண்பர் கைது
- ஆனந்தா, வெங்கடா சலத்து டன் தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
- பாக்கிய லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி ஆனந்தா வை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, மத்திகிரி அருகே உள்ள பொம்மண்டப் பள்ளியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 42), விவசாயி. இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (30).
இந்த நிலையில் பாக்கிய லட்சுமி செல்போனில் சமூக வலை தளமான முக நூலில் (பேஸ்புக்) கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம், ஆனேக்கல் தாலுகா திம்ம சந்திரத்தை சேர்ந்த ஆனந்தா (33) என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இது பாக்கிய லட்சுமியின் கணவர் வெங்கடாசலத்திற்கு தெரிய வந்தது.
இது குறித்து அறிந்து அவர் தனது மனைவியை கண்டித்தார். பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் தேவையற்ற நபர்களுடன் பேசி, பழக கூடாது என்று எச்சரித்தார்.
மேலும் ஆனந்தாவையும் எச்சரித்தார். இதனால் பாக்கியலட்சுமிக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற் பட்டது.
இதனால் கணவருடன் கோபித்து கொண்டு பாக்கிய லட்சுமி, தனது பெற்றோர் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்றார்.
மேலும் தொடர்ந்து பேஸ்புக்கில் ஆனந்தாவுடன் பழகி வந்தார். இந்த நிலையில் தனது மனை வியை வீட்டிற்கு வெங்கடா சலம் அழைத்து வந்தார்.
கடந்த 21-ந் தேதி பொம்மண்டப்பள்ளியில் உள்ள நிலத்தில் வெங்க டாசலமும், பாக்கியலட்சுமி யும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஆனந்தா, வெங்கடா சலத்து டன் தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து பாக்கிய லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி ஆனந்தா வை கைது செய்தனர்.
அவர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் பிரிவு களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






