search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
    X

    கடலூர் பகுதியில் திடீர் மழை காரணமாக குடைபிடித்து செல்பவர்களை படத்தில் காணலாம்.

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

    • மறு உத்தரவுவரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு முதல் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    தென்மேற்கு வங்க க்கடலில் மையம் கொண்டி ருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. மேலும் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி மறு உத்தரவுவரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. மேலும் கடல் சீற்றம் காரணமாக சுமார் 30 அடி வரை கடல் அலை முன்னோக்கி வந்து செல்கின்றது. இதன் காரணமாக கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் லேசான மழை தொடங்கியது. இதனை தொடர்ந்து நள்ளிரவு மற்றும் காலை வரை கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டா ம்பாக்கம், நடுவீரப்பட்டு, சிதம்பரம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது மார்கழி மாதம் என்பதால் இரவு முதல் பனி இருந்த வந்த நிலையில் காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவும், குளிரும் இருந்து வருகின்றது. தற்போது கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கி உள்ள தால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருவ தோடு, குளிர்ந்த காற்று வீசி வருகின்றது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு முதல் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். தொடர் மழை காரணமாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிறிஸ்தவ ஆலை யங்களுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் செல்ல முடி யாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்ததும் காண முடிந்தது. மேலும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குடைப்பிடித்த படியும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படியும் சென்ற தையும் காணமுடிந்தது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு- கடலூர் - 12.3, பரங்கிப்பேட்டை - 4.2, அண்ணாமலை நகர் -3.5, சிதம்பரம் - 2.5, கலெக்டர் அலுவலகம் - 0.2. மொத்தம் - 22.70 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

    பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள புதுப்பே ட்டை, காடாம்புலியூர் ஆகிய இடங்களில் இன்று காலை திடீர் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ள நீராகபெருக்கு பெருக்கெடுத்து ஓடியது.வாகன ஓட்டிகள் சாலை களில் ஊர்ந்து சென்றனர். கடந்த 10 ஆண்டுகாலமாக சாலை பணியை நடக்கா ததால் பண்ருட்டி சென்னை சாலை, பண்ருட்டி- கும்பகோணம் சாலை முற்றிலும் சேதமடைந்து மழையில் சேரும் சகதியமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள்மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    Next Story
    ×