search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பஸ் நிலையத்தில் இறந்த முதியார் யார்?
    X

    புதிய பஸ் நிலையத்தில் இறந்த முதியார் யார்?

    • புதிய பஸ் நிலையத்தில் ஒரு வருடமாக 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்.
    • திடீரென உடல் நிலை பாதிப்படைந்தது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஒரு வருடமாக 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நிலை பாதிப்படைந்தது. இதனால் அவர் சைக்கிள் நிறுத்தம் அருகே மயங்கி நிலையில் கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பள்ளப்பட்டி போலீசார், அங்கு சென்று முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் முதியவர் கடந்த 4-ந்தேதி இரவு 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். முதியவருக்கு வலது முழங்கால், இடத முழங்காலில் காயத்தழும்பு இருந்தது. முதிவயர் பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? அவரது உறவினர்கள்? பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை.

    இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×