என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செங்கோட்டையில் பெண்ணை கொடூரமாக கொலை செய்தவர்கள் யார்?- போலீசார் தீவிர விசாரணை
- ரத்தக்காயங்களுடன் அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- பாலியல் ரீதியாக அந்த பெண் துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்திருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த 43 வயதான ஒரு பெண் தனது பெற்றோர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். அவருக்கு அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள் உணவு அளித்து வந்தனர்.
கொடூர கொலை
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்த பெண் தனது வீட்டின் முன்பு தலை உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இறந்த பெண்ணின் உடலை செங்கோட்டை டாக்டர்கள் பரிசோதித்ததில் அவரது உடலில் ரத்தக்காயங்கள் அதிகமாக இருந்ததும், அவர் மர்ம நபர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்திருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அதன் முடிவு வெளியான பின்னரே அவர் கற்பழிக்கப் பட்டாரா? என்பது தெரியவரும். அதேநேரத்தில் அவரது உடலில் இருந்த காயங்களால் பெண்ணை கொடூரமாக கொலை செய்தவர்கள் யார்? என்று அந்த பகுதியில் உள்ள வர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்