என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்  34 பயனாளிகளுக்கு ரூ.2.97 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
    X

    கிருஷ்ணகிரியில் 34 பயனாளிகளுக்கு ரூ.2.97 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

    • ரூ.17 ஆயிரம் வீதம் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் ஈமச்சடங்கு உதவி தொகை வழங்கப்பட்டது.
    • மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம் சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 228 மனுக்களை கொடுத்தனர்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.17 ஆயிரம் வீதம் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் ஈமச்சடங்கு உதவி தொகையும், 18 மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளுக்கு ரூ.25 ஆயிரத்து 750 மதிப்பில் கல்வி உதவி தொகை என மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×