search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் நேர்காணல் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    மக்கள் நேர்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகளை பழனிமாணிக்கம் எம்.பி, கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் வழங்கினார்.

    மக்கள் நேர்காணல் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • செங்கமங்கலம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது
    • 26 பேருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் செங்கமங்கலம் கிராமத்தில் தெய்வாங்கப் பெருமாள் திருக்கோயில் திடலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

    தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இம்முகாமில் 59 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி எம்.பி பழனிமாணிக்கம் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் பேராவூரணி வட்டம் செங்கமங்கலம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்று வருகிறது.

    சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு ரூபாய் 34 ஆயிரத்து 200 மதிப்பீட்டில் உதவி தொகையும் வேளாண்மை துறை சார்பில் 4 பயனாளிகளுக்கும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செங்கமங்கலம் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 15 லட்சம், தோட்டக்கலை துறை மூலம் மானியம் பெறும் மூன்று பயனாளிகளுக்கு ரூபாய் 33 ஆயிரத்து 625 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வருவாய் துறை சார்பில் 26 பேருக்கு பட்டா மாறுதல் ( உட்பிரிவு) இம்முகாமில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    முன்னதாக தோட்டக்கலை துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

    வருவாய் கோட்டாட்சியர் அ.அக்பர் அலி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், தவமணி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் உ.துரை மாணிக்கம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜரத்தினம், செங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.செல்வம், காலகம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராவூரணி வட்டாட்சியர் ரா.தெய்வானை நன்றி கூறினார்.

    Next Story
    ×