search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் 154 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    கோத்தகிரியில் 154 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

    • தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை போக்க பல முகாம்களை அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள்.
    • இந்த முகாமின் மூலம் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.

    கோத்தகிரி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை போக்க பல முகாம்களை அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள்.

    இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி நெடுகுளா பகுதியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் மக்கள் மனு நீதிநாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 154 பயனாளிகளுக்கு சுமார் 66.19 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இம்முகாமினை முன்னிட்டு பொதுமக்களிடமிருந்து 282 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 165 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டு 117 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

    குறிப்பாக இந்த முகாமின் மூலம் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ்,

    தனித்துணை ஆட்சியர் முருகன் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×