என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோணங்கி அள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் சாந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய காட்சி.
126 பயனாளிகளுக்கு ரூ.80.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டி ருந்த கண்காட்சி அரங்கு களை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
- 3 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகள் என மொத்தம் 126 பயனாளிகளுக்கு ரூ. 80,27,622 மதிப்பிலான பல்வேறு அரசு நல திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கோணங்கி அள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
முகாமில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 4 பயனாளிக்கு பட்டா மாறுதலையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ.24.45 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், இந்திராகாந்தி தேசிய முதியோர்கள், தற்காலிக இயலாதோர்கள், திருமணம் மற்றும் இயற்கை மரண உதவித்தொகைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 32 பயனாளிகளுக்கு ரூ.19.20 லட்சம் மதிப்பீட்டில் இ-பட்டாகளையும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.14.40 லட்சம் மதிப்பீட்டில் இ-பட்டாகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1.34 இலட்சம் மதிப்பீட்டில் விசை தெளிப்பான், துவரை நாற்றுகள், சொட்டுநீர் பாசன கருவி உள்ளிட்ட வேளாண் உதவிகளையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.85,000 மதிப்பீட்டில் பவர் டிரில்லர் கருவிகளையும், தோட்டகலைத் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1.90 லட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசன கருவிகளையும், தக்காளி, மிளகாய், கொய்யா நாற்றுகளையும் வழங்கினார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் 25 விவசாயிகளுக்கு ரூ.12.91 லட்சம் கடன் உதவிகளைவும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1.72 இலட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரணம், திருமண உதவி, ஒய்வூதியம் உள்ளிட்ட உதவித்தொகைகளையும், மகளிர் திட்டம் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகள் என மொத்தம் 126 பயனாளிகளுக்கு ரூ. 80,27,622 மதிப்பிலான பல்வேறு அரசு நல திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
முகாமில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் டி.கே.கீதாராணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரஸ்வதி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் ராஜேஸ்வரி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் தனலட்சுமி, கோணங்கிஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் அலமேலு, கோணங்கிஅள்ளி ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






