என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தி.மு.க பொதுகூட்டத்தில் தி.மு.க மாவட்ட கழக செயலாளர் எம்.எல்.ஏ.மதியழகன். சிறப்புறையாற்றும் போது எடுத்த படம்.
மத்தூரில் நலத்திட்ட உதவிகள்
- தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பொதுகூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு நலதிட்டங்களை வழங்கினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பொதுகூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தி.மு.க ஒன்றிய கழக செயலாளர் (வடக்கு) குண வசந்தரசு தலைமை வகித்தார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தி.மு.க மாவட்ட கழக செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு நலதிட்டங்களை வழங்கினார்.
முன்னதாக மத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டப்பட்டி ஊராட்சி மாதம்பதி பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் கட்சி கொடியேற்றி ஏற்றி வைத்தும் தூய்மை பணியாளர்களை கெளவரவித்தும் சீறுடைகள் மற்றும் இனிப்பு வழங்கி மகளிர் தின வாழ்த்து கூறி சிறபுரையற்றினார்.
இதனை தொடர்ந்து மத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நாகம்பட்டி கோட்டானூர், ஒலப்பட்டி, குன்னத்தூர், பெரம கவுண்டனூர், பொம்மேப்பள்ளி ஊராட்சி ஜீடி குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க கழக கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலதிட்ட ங்களை வழங்கினார். பொது கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் புதுகோட்டை விஜியா சிறப்புரையாற்றினார்.
இதில் மத்தூர் தி.மு.க தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நரசிம்மன் தலைமையில் செயற்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட பொருளாளர் கதிரவன், ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், துணைத் தலைவர் பர்வின் தாஜ் சலீம், ஒன்றிய துணை செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சங்கர், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட பிரதநிதிகள் கோவிந்தராஜ், சாந்தமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுப்பிரமணி, சந்தோஷ்குமார், செல்வி கதிர்வேல், பெருமாள், செந்தாமரை சுப்பிரமணி, பரந்தாமன், ஒன்றிய பிரதிநிதி தனசேகரன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் ஊராட்சி செயலாளர் கமலநாதன் நன்றி கூறினார்.






