search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்ற வேண்டும்
    X

    சுக்கானாறில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்.

    வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்ற வேண்டும்

    • 80 சதவீத ஆற்றுநீர் பாசனத்தை நம்பி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காடுகள் மண்டி பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தை பொறுத்த அளவு 80 சதவீதம் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும் 20 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பதன் காரணமாக குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் கோடை காலத்தை பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் சிறு குறு வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    குறிப்பாக திருவாரூர் நகரின் வழியாக செல்லும் சுக்கானாறு, கேக்கரை பீ சேனல் வாய்க்கால் ஆகியவை மூலம் அருகில் உள்ள கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    சுக்கானாறு முழுவதும் ஆகாய தாமரை மண்டி கிடைக்கிறது இதனால் தண்ணீர் செல்லாத சூழல் உருவாகி உள்ளது.

    ஆகையால் ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றி தர வேண்டும். அதேபோன்று கேக்கரை பி சேனல் வாய்க்கால் முழுவதுமாக கழிவுநீரை வாய்க்காலில் கலந்து விடுவதால்

    பி சேனல் வாய்க்கால் முழுவதுமாக கழிவுநீர் தேங்கி இருக்கிறது. மேலும் காடுகள் மண்டி பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

    உடனடியாக பிசேனல் வாய்க்காலை முழுமையாக தூர்வாரி தர வேண்டும்.

    அதுபோல் கிராமப்புறங்களில் உள்ள சிறு குறு வாய்க்கால்கள் ஆகியவற்றை முழுமையாக தூர்வார வேண்டும்.

    தமிழக அரசு தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கீடு அதிக அளவில் செய்ய வேண்டும்.

    மேலும் தூர்வாரும் பணிக்கு என விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து விவசாயிகளிடம் ஆலோசனை கேட்டு அதன் அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×