search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பஜாரில் குழாய் உடைந்து குடிநீர் வினியோகம் பாதிப்பு
    X

    உடன்குடி பஜாரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்லும் காட்சி.

    உடன்குடி பஜாரில் குழாய் உடைந்து குடிநீர் வினியோகம் பாதிப்பு

    • உடன்குடி பஜார் பகுதியில் அனைத்து இடங்களிலும் மத்திய அரசின் கேபிள் லைன் பதிக்கும் பணிக்காக ஜே.சி.பி. எந்திரங்களின் மூலம் தோண்டப்பட்டு வருகிறது.
    • இதனால் 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்படும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி பஜார் பகுதியில் அனைத்து இடங்களிலும் கிராமத்திற்காக வேண்டி மத்திய அரசின் கேபிள் லைன் பதிக்கும் பணிக்காக ஜே.சி.பி. எந்திரங்களின் மூலம் தோண்டப்பட்டு வருகிறது. இவ்வாறு தோண்டுகின்ற போது அனைத்து இடங்களிலும் 18 வார்டுகளுக்கு செல்லக்கூடிய மெயின் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் குடிதண்ணீர் வீணாகிறது. இதனால் 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்படும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 8 நாட்களாக நகரம் முழுவதும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடப்பது மற்றும் தண்ணீர் தேங்கி வீணாக செல்வதால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் போக்குவரத்து நெருக்கடியில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர். அனைத்து வார்டுகளில் உள்ள பொதுமக்கள் வெயில் காலத்தில் தண்ணீர் வினியோகம் இல்லாத காரணத்தினால் அவதிப்படுவதாக புகார் கூறுகிறார்கள்.

    Next Story
    ×