search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல கோடன்குளம் கிராமத்திற்கு மீண்டும் தண்ணீர் விநியோகம்-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு
    X

    மேல கோடன்குளம் கிராமத்திற்கு மீண்டும் தண்ணீர் விநியோகம்-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு

    • கடந்த 3 மாதமாக மின் மோட்டார் பழுது நீக்கம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் புதிய நீர் மூழ்கி மோட்டாரை வாங்கிக் கொடுத்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முனைஞ்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மேல கோடன்குளம் கிராமம்.

    இந்த ஊரில் உள்ள பொதுமக்களுக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த மின் மோட்டார் பழுதானது. கடந்த 3 மாதமாக மின் மோட்டார் பழுது நீக்கம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வந்தனர். தண்ணீர் கிடைக்காமல் தவித்து வந்தனர்.

    இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனிடம், பழுதாகிக் கிடக்கும் ஊர் மின் மோட்டாரை சரிசெய்து தருமாறு, அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை உடனடியாக ஏற்றுக்கொண்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தனது சொந்த செலவிலேயே, புதிய நீர் மூழ்கி மோட்டாரை அந்த ஊர் மக்களுக்கு வாங்கிக் கொடுத்தார். பின்னர் அது உடனடியாக பொருத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

    இதனையடுத்து அந்த பகுதிக்கு தற்போது தண்ணீர் விநியோகம் தொடங்கியது. கடந்த 3 மாதமாக தடைப்பட்டிருந்த தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்த தங்களின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிக் கொடுத்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுக்கு மேலகோடன்குளம் கிராம மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×