search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது- பாலருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
    X

    பாலருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்.

    தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது- பாலருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

    • குற்றாலம் அருவிகளில் குளிக்க சீசன் காலத்தின்போது லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள்.
    • பாலருவியானது செங்கோட்டை, புளியரை, கோட்டைவாசல் கடந்து ஆரியங்காவு சோதனை சாவடி அருகில் அமைந்துள்ளது.

    செங்கோட்டை:

    தமிழகம் மற்றும் கேரளாவுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் எல்லைப் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலையாகும். இதில் இருந்து உற்பத்தியாகும் குற்றாலம் அருவிகளில் குளிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு சீசன் காலத்தின்போதும் குடும்பத்துடன் வருவார்கள்.

    சீசன் குறையும் போது தமிழக -கேரளா எல்லை பகுதியில் அமைந்துள்ள பாலருவிக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் படை யெடுக்கும். இந்த பாலருவி யானது செங்கோட்டை, புளியரை, கோட்டைவாசல் கடந்து ஆரியங்காவு சோதனை சாவடி அருகில் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 300 அடி உயரம் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் தொடர் மழை யால் காய்ச்சிய வெள்ளி யை உருக்கியது போல் விழும் நீர், பார்போரை பிரமிக்க வைக்கும்.

    செங்கோட்டையில் இருந்து பாலருவிக்கு சுமார் 30 கிலோமீட்டர் தூரம் உள்ளது. தற்போது தென்மேற்கு பருவ மழை காலதாமதம் உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த மாத இறுதியில் மக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்பட வேண்டிய பாலருவி இதுவரை திறக்கப்பட வில்லை. இந்நிலையில் தற்போது பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணி களுக்கு கேரளா அரசு அனுமதியளி வழங்கி உள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×