என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனித- விலங்குகள் மோதலை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள்- நீலகிரி கலெக்டர் அருணா பேச்சு
- நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் நுழையும் யானைகளை விரட்ட கும்கி யானைகள் பயன்படுத்தப்படும்.
- வனநிலங்களில் உள்ள சாலையோர புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் மனித - விலங்குகள் மோதலை தடுப்பது குறித்து மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் வனத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை ஆகிய துறைகளின் முன்னிலையில் பொதுமக்கள் மனித- விலங்குகள் மோதலை தடுப்பது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருணா பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் நுழையும் யானைகளை விரட்ட கும்கி யானைகள் பயன்படுத்தப்படும். மேலும் யானைகளை விரட்ட கூடுதல் தன்னார்வலர்களும் நியமிக்கப்படுவார்கள். வனநிலங்களில் உள்ள சாலையோர புதர் களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிக மனித விலங்கு மோதல்கள் ஏற்படும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். தனியார் எஸ்டேட்களின் உரிமையாளர்கள் தங்கள் தோட்டங்களுக்கு அருகில் உள்ள சாலையோரம் உள்ள புதர்களை அகற்ற வேண்டும்.
மேலும் தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளில் தெரு விளக்குகள் உடனடியாக அமைக்க உள்ளாட்சிததுறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






