search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்
    X

    தேரோட்டம் நடந்தது.

    வதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்

    • தருமபுரம் ஆதீனம் தலைமையேற்று தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.
    • தேர் நான்கு வீதிகளில் சுற்றி வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை சேந்தங்குடியில் அமைந்துள்ள ஸ்ரீஞானாம்பிகை உடனாகிய ஸ்ரீவதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் துலா உற்சவ திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

    இந்த தேரோ ட்டத்தை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசீக ஞானசம்பந்தம் பிரமாசாரிய சுவாமிகள் தலைமையேற்று தேரை வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.

    ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், தென் மண்டல கட்டளை விசாரனை ஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் தேர் நான்கு வீதிகளில் சுற்றி வலம் வந்து கோயில் சந்நதியை வந்தடைந்தது. பக்தர்கள் பக்தியுடன் வடம்பிடித்து தேரை இழுத்து வந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிவஸ்ரீ பாலசந்திர சிவாச்சாரியார், கண்காணிப்பாளர் அகோரம், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் மோகன், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொன்டனர்.

    Next Story
    ×