search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டை ஐ.டி.ஐ.யில் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் - 10-ந் தேதி நடக்கிறது
    X

    பேட்டை ஐ.டி.ஐ.யில் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் - 10-ந் தேதி நடக்கிறது

    • நெல்லை பேட்டையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதமரின் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் வருகிற 10-ந் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.
    • மத்திய, மாநில அரசு மற்றும் தனியாா் துறையைச் சோ்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தோ்வு செய்ய உள்ளனா்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நெல்லை பேட்டையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதமரின் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் வருகிற 10-ந் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.

    முகாமில், ஐ.டி.ஐ. பயின்று தோ்ச்சிப் பெற்ற பயிற்சியாளா்கள், பொறியியல் பிரிவில் பட்டயம் மற்றும் பட்ட சான்றிதழ் பெற்ற இளைஞா்கள், இளம் பெண்கள் கலந்துகொள்ளலாம். இதில், மத்திய, மாநில அரசு மற்றும் தனியாா் துறையைச் சோ்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தோ்வு செய்ய உள்ளனா்.முகாமில் பங்கேற்க விரும்பும் பயிற்சியாளா்கள், தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் தோ்ச்சி பெற்ற சான்றிதழ், 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04622-342432, 9499055790 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×