என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் அரிசி கடத்தல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்

    ரேசன் அரிசி கடத்தல்

    • விருதுநகரில் சரக்கு வேனில் 1,500 கிலோ ரேசன் அரிசி கடத்தப்பட்டது.
    • காந்திநகரை சேர்ந்த செல்வன்(45) என்பவரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    விருதுநகர் வடமலை குறிச்சி ரோட்டில் இன்று காலை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து சோதனை செய்த போது அதில் 1,500 கிலோ ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது.

    அதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த விருதுநகர் காந்திநகரை சேர்ந்த செல்வன்(45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது பொதுமக்களிடம் ரேசன் அரிசியை வாங்கி ஆலைகளுக்கு விற்பது தெரியவந்தது.

    Next Story
    ×