search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மில் உரிமையாளர் தற்கொலை
    X

    மில் உரிமையாளர் தற்கொலை

    • விருதுநகர் அருகே மில் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பாலையம்பட்டி

    அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி குருநாதன் கோவில் தெருவை சேர்ந்தவர் குட்டி (வயது 49). இவர் கட்டங்குடி செல்லும் சாலையில் பருப்பு மில் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று குட்டி தனது மில்லில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குட்டி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×