search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகரில் விஜய் இலவச சட்ட மையம் தொடக்கம்
    X

    விருதுநகரில் விஜய் இலவச சட்ட மையம் தொடக்க விழா நடைபெற்றபோது எடுத்தபடம்.

    விருதுநகரில் விஜய் இலவச சட்ட மையம் தொடக்கம்

    • விருதுநகரில் விஜய் இலவச சட்ட மையம் தொடங்கப்பட்டது.
    • நிர்வாகிகள் ரசிகர்கள் பொதுமக்கள் பலர கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். ஏழை, எளிய மக்கள் நலனை கருத்தில் கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள வழக்கறி ஞர்களை கொண்டு இலவச சட்ட மையம் என்ற புதிய திட்டத்தை நடிகர் விஜய் அறிவித்தார். இதையொட்டி பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து விரு துநகரில் இலவச சட்ட மையத்தை விருதுநகர் விஜய் மக்கள் இயக்கம் தொகுதி தலைவர் செல்வம், மாவட்டச் செயலாளர் சின்னப்பன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த சட்ட மையத்தின் மூலம் குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை, விபத் தில் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்வது,

    கந்து வட்டியால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி உதவி செய்ய வேண்டும், கந்து வட்டி கொடுமையை முற்றிலும் ஒழிக்க பாடுபட வேண்டும், பள்ளி, கல்லூரி களில் மாணவ, மாணவிகள் சேருவதற்கு உதவி செய்ய வேண்டும், ஏழை-எளிய மக்களின் அடிப்படை பிரச் சினைகளை நிரந்த தீர்வு காணுவதற்கும் இம்மை யத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் வழக்க றிஞர் அணி தமிழ்செல்வன், ரகு, ஒன்றிய செயலாளர் முத்து விஜய், விருதுநகர் நகர பொருளாளர் திவாகர், மாவட்ட தொண்டரணி துணைத் தலைவர் மூர்த்தி, ஒன்றிய தொண்டரணி சூர்யா, வார்டு தலவைர் ரஞ்சித், ஒன்றியத் தலைவர் மாரித்தங்கம் இளைஞர் அணி நிர்வாகி ஜோட் என்ற அஜித், மகராஜா, சுரேஷ், கார்த்திக், முனியசாமி, முரளி உள்பட பல்வேறு நிர்வாகிகள் ரசிகர்கள் பொதுமக்கள் பலர கலந்து கொண்டனர்.

    Next Story
    ×