search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி வகுப்பு
    X

    டி.என்.பி.எஸ்.சி. இலவச பயிற்சி வகுப்பு

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் டி.என்.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
    • நண்பர்கள் ரோட்டரி சங்கம், டால்பின் அகடாமி, முகில் இன்ஸ்டியூஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தியது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நண்பர்கள் ரோட்டரி சங்கம், டால்பின் அகடாமி, முகில் இன்ஸ்டியூஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.

    சங்கத்தின் தலைவர் அங்குராஜ் தொடங்கி வைத்து பேசினார். அகடாமி நிறுவனர் முருகதாசன் வரவேற்றார். டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வில் 10 ஆண்டுகளுக்கு மேலான பணி அனுபவம் பெற்றுள்ள விரிவுரையாளர்களான முகில், வீரையா, செல்வி ஆகியோர் பயிற்சி வகுப்பினை நடத்தினர்.

    சுமார் 45 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சமுத்திரவேல், ரோட்டரி நிர்வாகிகள் முருகானந்தம், வினோத்குமார், ஸ்டார் ஹெல்த் வெங்கடேஷ், பத்திர எழுத்தர் ராஜாமணி, விக்ரம் முருகன், கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் செயலாளர் பால்சாமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திட்ட இயக்குனர்கள் கந்தசாமி, அமுதா ஹரிஹரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×