search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமான 3 மாதத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    திருமணமான 3 மாதத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    • திருமணமான 3 மாதத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வத்திராயிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள அபிராமம் அச்சங்குளத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது27). இவரும் அதே ஊரை சேர்ந்த குணசுந்தரி என்பவரும் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் 2 பேரும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன் பட்டியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

    குணசுந்தரி அதே பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார். கடந்த சில வாரங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் இரவு அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே குணசுந்தரி வீட்டின் மாடி அறைக்கு சென்றுவிட்டார். அப்போது குடும்ப பி ரச்சினையால் விரக்தியில் இருந்த அருண்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த குணசுந்தரி கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    வத்திராயிருப்பு அருகே உள்ள கோபாலபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் சஞ்சீவி(வயது65). இவருக்கு கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பு இருந்தது. இதில் விரக்தி யடைந்த சஞ்சீவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வத்திரா யிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×