என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறுபான்மையினர்-பிற்படுத்தப்பட்டோருக்கு தொழில் கடன் வழங்க சிறப்பு முகாம்
- சிறுபான்மையினர்-பிற்படுத்தப்பட்டோருக்கு தொழில் கடன் வழங்க சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது.
- மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலக கூட்டுறவு வங்கிகளை தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வாழும் சிறு பான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து கொண்டிருக்கின்ற தொழிலை விரிவுபடுத்திடவும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம் பாட்டு கழகம் 'டாம்கோ' மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகம் 'டாம் செட்கோ' குறைந்த வட்டியில் பல திட்டங்களுக்கு கடன் வழங்குகிறது.
சிறு தொழில் வியாபாரம் செய்ய தனி நபர் கடன், மகருக்கான சிறு கடன் திட்டம், ஆண்களுக்கான சிறு டன் திட்டம், கறவை மாட்டுடன், இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு சுய தாழில் தொடங்கிட கடன் ட்டம், மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுயதொழில் தொடங்கிடவும் கடன் திட்டம் உள்ளது.
சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிர்கள் கடன்திட்டம், கல்வி கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. கடன்வழங்கும் முகாம் மாவட்டத்தில் தாலுகா அளவில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது.
நாளை 8-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை பட்டோர் பொருளாதார தாலுகா அலுவலகங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகிறது. நாளை விருதுநகர், 11- ந்தேதி காரியாபட்டி. 12-ந் தேதி அருப்புக்கோட்டை, 13-ந் தேதி திருச்சுழி, 14-ந் தேதி சிவகாசி, 15-ந் தேதி ராஜபாளையம், 18-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர், 19-ந் தேதி சாத்தூர். 20-ந்தேதி வெம்பக்கோட்டை, 21-ந் தேதி வத்திராயிருப்பு.
கடன் தேவைப்படும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மக்கள் கடன் தொகை பெற கடன் விண்ணப்ப படிவம், மதத்திற்கான சான்று சாதி சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை நகல், ஆதார் அடையாள அட்டை நகல், ஓட்டுனர் உரிமம் நகல் (வாகன கடன் பெறுவோர் மட்டும்), விலை பட்டியல் அசல், திட்ட தொழிலறிக்கை, உண்மை சான்றிதழ் அசல், கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ், 2புகைப்படம் (கல்விக்கடன் கோருவோர் மட்டும்) கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் மற்றும் அடமான ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலக கூட்டுறவு வங்கிகளை தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்