என் மலர்
உள்ளூர் செய்திகள்

சொத்து கேட்டு தாய்-தந்தையை தாக்கிய மகன்
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சொத்து கேட்டு தாய், தந்தையை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
- இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமான்தேவன்பட்டியை சேர்ந்தவர் முத்து(75). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு மணிமாறன் என்ற மகனும், 2மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் சொத்துகளை தனது பேரில் எழுதி வைக்குமாறு மணிமாறன் தந்தையிடம் வற்புறுத்தி வந்தார். ஆனால் 2மகள்கள் இருப்பதால் 3பேருக்கும் சரிசமமாக சொத்தை பங்கீடு செய்துதான் தரமுடியும் என முத்து கூறியுள்ளார்.இந்த நிலையில் சம்பவத்தன்று சொத்துக்களை எழுதி வைக்க கேட்டு மணிமாறன் பெற்றோருடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிமாறன் பெற்றோரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து முத்துலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






