search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீனிவாச பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு
    X

    கோவிலில் சன்னதியில் உள்ள 8 உண்டியல்கள் திறந்து பணம் எண்ணும் பணி நடந்தது.

    சீனிவாச பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு

    • சீனிவாச பெருமாள் கோவில் 8 உண்டியல்கள் திறந்து பணம் எண்ணும் பணி நடந்தது
    • இதில் ரொக்கப்பணம் ரூ.11 லட்சத்து 32 ஆயிரத்து 320-ம், 32 கிராம் தங்க நகைகளும், 27 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு ரூபாய் ேநாட்டுகளும் கிடைத்தன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சன்னதியில் உள்ள 8 உண்டியல்கள் திறந்து பணம் எண்ணும் பணி நடந்தது.

    விருதுநகர் அறநிலையத்துறை உதவி ஆணையர் வளர்மதி தலைமையில், செயல் அலுவலர் கரு முத்துராஜா, ஆய்வாளர் முருகானந்தம், தக்கார் பிரதிநிதி ராஜாராம், நகை மதிப்பீட்டாளர் பிரபாகரன், அர்ச்சகர் ராஜ கோபால பட்டர் முன்னிலையில் உண்டியல் திறந்து பணம் எண்ணப்பட்டன.

    இதன் முடிவில் ரொக்கப்பணம் ரூ.11 லட்சத்து 32 ஆயிரத்து 320-ம், 32 கிராம் தங்க நகைகளும், 27 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு ரூபாய் ேநாட்டுகளும் கிடைத்தன.

    Next Story
    ×