search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஷேக்ஸ்பியர் நாடக அரங்கேற்றம்
    X

    ஷேக்ஸ்பியர் நாடக அரங்கேற்றம்

    • ஷேக்ஸ்பியர் நாடக அரங்கேற்றம் நடந்தது.
    • வைரமுத்து மற்றும் கொண்டம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), ஆங்கிலத் துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஆங்கிலத்துறை ஏற்பாடு செய்த நாடகக் காட்சியை காணச் சென்றனர். ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் எழுதிய ஒத்தல்லோ என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் சிறந்த கலைநயத்துடனும், பாவனைகளுட னும் தங்களது கதாபாத்திரத்திற்கான உடை மற்றும் அணி கலன் உதவியுடன் நாடகத்தினை மிகவும் துல்லியமாகவும் சிறப்பாகவும் விளக்கினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண் டனர். சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி சார்பாக 61 ஆங்கிலத் துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முனைவர் பவுமினா, துறைத்தலைவர் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் அர்ச்சனா தேவி, வைரமுத்து மற்றும் கொண்டம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×