என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உரிமம் புதுப்பிக்காத கல்குவாரிக்கு சீல்
Byமாலை மலர்31 March 2023 8:22 AM GMT
- உரிமம் புதுப்பிக்காத கல்குவாரிக்கு கலெக்டர் சீல் வைத்தார்.
- கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் செங்குன்றாபுரம் பகுதியில் ஆய்வுக்காக சென்றார். அவர் அங்கிருந்த கல்குவாரி ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த குவாரிக்கான உரிமம் 2022-ம் ஆண்டே முடிந்து விட்டதும், உரிமத்தை புதுப்பிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கல்குவாரிக்கு உடனடியாக சீல் வைக்கவும், அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தாசில்தார் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் அந்த கல்குவாரிக்கு சீல் வைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X