search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலைவாய்ப்பை பெற்று தரும் பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி
    X

    பணி நியமன ஆணைகளை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    வேலைவாய்ப்பை பெற்று தரும் பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி

    • வேலைவாய்ப்பை பெற்றுதரும் பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி அனைத்து மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஆண்டுக்கான சேர்க்கை நடக்கிறது.
    • இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் ஒவ்வொ ரு வருடமும் மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர்.

    தாயில்பட்டி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயற்கை எழிலுடன் பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ-மாணவிகள் சிறந்த கல்வியை பெற்று தங்களது வாழ்வை மேம்படுத்தி க்கொள்ள பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் ஒவ்வொ ரு வருடமும் மாநில மற்றும் மாவட்ட அளவில் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர்.

    நாக் "ஏ" கிரேடு பெற்றுள்ள இந்த கல்லூ ரியில் என்ஜி னீயரிங் படிப்பு களான சி.எஸ்.இ., இ.சி.இ., இ.இ.இ., மெக்கானிக்கல், சிவில், பயோமெடிக்கல் போன்றவையும் உயர் படிப்புகளான எம்.இ., சி.எஸ்.இ., எலக்ட்ரா னிக்ஸ், ஸ்டெக்சரல் என்ஜினீயரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டிரைவ்ஸ், என்ஜினீயரிங் டிசைன் மற்றும் பி.எச்.டி. பாடப்பிரிவுகளும் செயல்பட்டு வருகி ன்றன.பி.டெக்கில் பயோடெக், ஆர்ட்டி பிசியல், இண்ட லிஜண்ட் மற்றும் டேட்டா சயின்ஸ், எம்.பி.ஏ. போன் பாட பிரிவுகள் உள்ளன.

    பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்பை முடித்து வெளியேவரும் மாணவ-மாணவிகளுக்கு நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தப்பட்டு பன்னாட்டு மற்றும் பிரபல நிறுவனங்கள் வேலைவாய்ப்புகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி இந்த ஆண்டு நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் பி.சி.எஸ்., சி.டி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, ஜோஹோ போன்ற நிறுவனங்களில் 1263 மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்வானவர்களுக்கு ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை ஊதியம் பெறுவார்கள். இதற்கான பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த ஆண்டு (2022-2023) என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 10-ம் மற்றும் பிளஸ்-2 சான்றிதழ், நிதந்தர சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, இமெயில்., பதிவு கட்டணம் செலுத்த ஏ.டி.எம்., கிரிடிட் கார்டுகள் கொண்டுவர வேண்டும். மேலும் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதற்கான ஆலோசனையும் வழங்கப்படும்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தில் சலுகையும் வழங்கப்படுகிறது.

    உடனடி சேர்க்கை்காக சிவகாசி, கோவில்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சாத்தூர், விளாத்திகுளம், கயத்தாறு, நெல்லை, தூத்துக்குடி, சங்கரன்கோவில், கடயநல்லூர் ஆகிய ஊர்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பான விவரங்க ளுக்கு 80125 31336, 78670 47070, 98946 04930 மற்றும் 80125 31321, 04562-239600 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இதேபோல் பி.எஸ்.ஆர்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி, பி.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி, பி.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

    Next Story
    ×