search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் போலீசின் கணவர் மாயம்
    X

    பெண் போலீசின் கணவர் மாயம்

    • பெண் போலீசின் கணவர் மாயமானார்.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர், நவ. 20-

    விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் முனிச்சாமி (வயது36). இவர் விருதுநகரில் தனியார் உயர்கல்வி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று லட்சுமிநகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் ஏறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

    அவர் மாயமானது குறித்து மனைவி பெண் போலீஸ் ராஜலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவரது மகள் சீதாலட்சுமி (21). நேற்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத சென்ற இவர் வீடு திரும்பவில்லை.

    அதுபற்றி தந்தை முருகன் கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×