என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மர்ம சாவு
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மர்மமாக இறந்து கிடந்தார்.
- போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி மூலம் 4 மகள்களும், சந்திரா என்ற மனைவி மூலம் மகன், மகள் உள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியப்பட்டி ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 75). போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி மூலம் 4 மகள்களும், சந்திரா என்ற மனைவி மூலம் மகன், மகள் உள்ளனர்.
சம்பவத்தன்று வீட்டுக்குள் சென்ற குமர வேல் உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டார். அதன்பின் நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பாண்டியன் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதற்குள் அங்கிருந்த வர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குமரவேல் தலை குப்புற விழுந்த நிலையில் மர்மமாக இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர்.
குமரவேல் எப்படி இறந்தார்? என பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.






