search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய ஆலய பிரதிஷ்டை விழா
    X

    புதிய ஆலய பிரதிஷ்டை விழா

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதிய ஆலய பிரதிஷ்டை விழா நடந்தது.
    • இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ பரிசுத்த பவுல் ஆலயத்தின் 4-வது புதிய ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற்றது. விழாவிற்கு மதுரை பேராயர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

    சபை ஆயர் அருள்தனராஜ் முன்னிலை வகித்தார். இதில் 34-வது அசனப் பண்டிகை விழாவும் அனுசரிக்கப்பட்டது. பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ஸ்டீபன் சுந்தர்சிங் இசைக்குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது. பாடல் போட்டியில் முதல் பரிசு பெற்ற அத்திகுளம் சி.எஸ்.ஐ பரிசுத்த பவுல் பாடகர் குழுவினருக்கு கேடயங்களை வழங்கினர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×