search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய கருத்தரங்கு
    X

    தேசிய கருத்தரங்கு

    • காளீஸ்வரி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
    • தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பர பாரதி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நீதி இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கை நடத்தியது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். கேரளா பல்கலைக்கழகக் கல்லூரி இணைப் பேராசிரியர் சீனிவாசன் "காலம் தோறும் அறமுணர்த்தல் பதினென்கீழ்க்கணக்கு அறநூல்களை முன்வைத்து'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    2-ம் அமர்வில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் உயராய்வு மையத்தின் உதவிப்பேராசிரியர் கரு.முருகனும், 3-ம் அமர்வில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் முதுகலைத் தமிழ் மற்றும் தமிழாய்வு மையத் தலைவர் சிவனேசனும் பேசினர். தமிழியல் துறைத் தலைவர் அமுதா வரவேற்றார். இதில் பிற கல்லூரி மாணவர்கள் 25 பேரும், தமிழியல் துறை மாணவர்கள் 140 பேருமாக மொத்தம் 165 மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பர பாரதி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை முத்துச்சிதம்பர பாரதி மற்றும் சங்கர் உள்பட தமிழியல் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×